தீவிரமான சர்ச்சைகளில், சமயங்களில் அமீரகத்து நண்பர்கள் தனிப்பட்ட முறையில் எழுதினாலும், அமீரகத்துக் கவலைகளையும், அமீரகத்து யதார்த்தங்களையும் வெளிப்படுத்தும் விதத்தில் யாரும் யோசித்ததில்லை.. சில வேளைகளில், சில சமயங்களில் மட்டுமே எழுதுவதையும் அமீரகத்து நண்பர்கள் கொண்டிருந்தனர்..திடீரென எட்டிப் பார்த்து எதையாவது சொல்லி விட்டு மறைந்து விடுவது அமீரக நண்பர்களின் வாடிக்கையாகிக் கொண்டிருந்த வேளையில்தான், எங்கேயோ கொழுத்திய திரி பற்றிக் கொண்டது போல யாருக்கோ எழுதிய மடலுக்குப் பதிலளிக்கையில், நண்பர் சுலைமான் "நீங்களெல்லாம் ஏன் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்ளக் கூடாது?" என்றொரு கேள்வியை எழுப்பியிருந்தார்.. |